Header Ads



பலஸ்தீனில் இனச்சுத்திகரிப்பு எனச்சொன்ன, ஒரே இலங்கை அரசியல் தலைவர் சஜித்தான் - இம்தியாஸ் Mp


பலஸ்தீனியர்களுக்கு எதிராக இனச் சுத்திகரிப்பு நடைபெறுவதாக, பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை, 18 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்த குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இதுபற்றி Jaffna Muslim இணையத்திடம் கருத்து தெரிவித்த மூத்த அரசியல்வாதி இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார்,

பலஸ்தீனர்களுக்கு எதிராக  தற்போது, இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து, சாக்குப் போக்கான அறிக்கைகளை சிலர் வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் மிகவும் மனம் திறந்து, உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

துருக்கி அதிபர் ரசப் எர்துகானும், பலஸ்தீனில் இனச்சுத்திகரிப்பு நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இலங்கையில் தற்போதுள்ள பெரும்பான்மைய சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாஸ பலஸ்தீனில் இனச்சுத்திகரிப்பு நடைபெறுவதாக கூறியிருப்பது குறிப்பிட்டு சிலாகிக்கப்படக் கூடியது என்றார்.

No comments

Powered by Blogger.