Header Ads



புத்தளத்திற்கு ஜனாசா பெட்டிகள் வழங்கிவைப்பு


கோவிட் 19 தொற்றினால் மரணமடைந்த பூத உடல்களை அடக்கம் செய்வதற்காக ஈடுபடும்  அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நாடு முழுவதிலிலும் தெரிவுசெய்யப்பட்ட YMMA கிளைகளினூடாகவும் மாவட்ட பணிப்பாளர்கள்  ஊடாகவும்  ஜனாசா பெட்டிகளை YMMA அனுப்பிவைத்துள்ளது.  

பல முஸ்லீம் குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களின் மரணங்கள் ஏற்படும் போது  உளவியல் ரீதியாக பாதிப்படைய கூடாது என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

அந்தவகையில்,புத்தளம் பெரியப்பள்ளி மற்றும் சிலாபம் ஜனாசா நலன்புறிச் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் YMMA தேசிய தலைவர் Shaheed M. Rismy அவர்களின் ஏற்பாட்டில் YMMA புத்தளம் மாவட்ட பணிப்பாளர் முஜாஹித் நிஸார், உறுப்பினர் முஹ்ஸி ஆகியோரால் புத்தளம் பெரியப்பள்ளி

பேஷ் இமாம் மெளலவி சிஹான், பள்ளியின் நிர்வாக உத்தியோகத்தர் மெளலவி நளீர் ஆகியோரிடம் புத்தளத்திற்கான 03 ஜனாசா பெட்டிகளும், சிலாபம் ஜனாசா நலன்புறி சங்க உறுப்பினர்களிடம் 03 ஜனாசா பெட்டிகளும் கையளிக்கப்பட்டன.


No comments

Powered by Blogger.