Header Ads



பாராளுமன்றத்திற்கு றிசாத் வருவதில், எந்த சட்டச்சிக்கலும் இல்லை - சட்டமா அதிபர் திணைக்களம்


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதில், எவ்வித சட்ட சிக்கலும் இல்லையென சட்டமா அதிபர் திணைக்களம் குற்ற விசாரணைத் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 24ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், 90 நாள்கள் தடுத்துவைத்து விசாரிக்கும் உத்தரவின் கீ்ழ் குற்ற விசாரணைப் பிரிவினரின் பொறுப்பின் கீழ், தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைப்பதைத் தடை செய்யுமாறு, ​பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.