ஜனாசா தொழுகையுடன் ஆறுவேளை தவறாமல், தொழுகின்ற பலஸ்தீன முஸ்லிம்கள்
ஒரு பக்கம் யுத்த சத்தம்,
மறு பக்கம் மரண ஓலம்
உலக முஸ்லிம்களுக்கு
கடமையான ஃபர்ளு தினமும்
ஐவேளை தொழுகை...
ஃபலஸ்தீன் முஸ்லிம்கள்
நித்தம் நித்தம் தொழுகின்றனர்
ஆறு வேளை தவறாமல்
ஜனாசா தொழுகையுடன்...
யூத வெறிநாய்களின்
அராஜக தாக்குதலுக்கு
காவு கொடுக்கின்றனர்
பெற்ற குழந்தையையும்
உற்ற உறவுகளையும்
ஃபலஸ்தீன் சகோதரிகளால்
பாலூட்டும் முலைக்காம்பில்
ஈரம் காய்வதற்குள் அங்கே
ஷஹீதாக்கப்படும் பிஞ்சுகள்
தோளில் போட்டு தாலாட்டிய
சின்னஞ்சிறு பைதல்களை
கஃபன் துணியில் பொதிந்து
கரங்களில் ஏந்தி கதறும்
கண்ணீர் காட்சிகள்
ஆனாலும் அவர்களின்
நெஞ்சுரமும் ஈமானுறுதியும்
கொஞ்சம் கூட குறையவில்லை...
தாயைப்போல் நேசிக்கும்
தாய்நாட்டை பாதுகாக்க
பிஞ்சு குழந்தைகள் முகத்திலும்
அறச்சீற்றம் தெரிகிறது..
ஆம்...இது சோதனைக்காலம்
நாங்கள் தவக்குல் வைக்கிறோம்
மூன்றாவது புனித இறையில்லம்
மஸ்ஜித் அல் அக்ஸாவில்
நிம்மதியாக ஸுஜூது செய்யும்
ஒரு காலம் வரும்...
அதுவும் விரைவில் வரும்...
இன்ஷா அல்லாஹ்...
Colachel Azheem
இன்ஷாஅல்லாஹ்
ReplyDelete