Header Ads



பாண் வாங்குவது போல, கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாது - சஜித் மீது நாமல் பாய்ச்சல்


கடைக்குச் சென்று பாண் வாங்குவதுபோல, கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொள்ள முடியாதென விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள நாமல், சில மாதங்களுக்கு முன்பே 13 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தைக் கொள்வனவு செய்வதற்கான நிதிக்கு  அமைச்சரவை ஊடாக  அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் நினைப்பதுபோல் கடைக்குச் சென்று பாண் வங்குவதைப் போல, தடுப்பூசி மருந்தை கொள்வனவு செய்யமுடியாது என்றார்.

அனுமதியளிக்கப்பட்ட 3 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  மேலதிகமாகப் பெற்றுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

1 comment:

  1. தங்கள் கால்சட்டைப் பையில் இருந்து நாட்டின் முக்கிய செலவுகளுக்காக பணம் வழங்கும் இந்தப் பெரியவர், மக்களின் அவசரத் தேவைகளுக்கு எப்படி பணம் பெறப்படுகின்றது என்பதை இந்தப் பெரிய மனிதர் பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கு தௌிவுபடுத்துகி்ன்றார்.

    ReplyDelete

Powered by Blogger.