Header Ads



ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கேட்கும், ஆவணத்தில் கையெழுத்திட்டார் ரஞ்சன்


சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த தகவல் ரஞ்சன் ராமநாயக்கவின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவினால் கையெழுத்திடப்பட்ட பொது மன்னிப்புக்கான ஆவணங்கள், சட்டத்தரணி அசான் பெணான்டோவினால், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, அந்தத் தண்டனையை அனுபவித்து வருகின்றார்.

No comments

Powered by Blogger.