சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை பரப்பும் பொதுபல சேனா – அமெரிக்கா குற்றச்சாட்டு
சிங்கள பௌத்த பெரும்பான்மையினத்தவர்களின் மேலாதிக்கத்தை பரப்பும் நடவடிக்கைகளில் பொதுபல சேனா தொடர்ந்தும் ஈடுபடுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்கா இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் சிறுபான்மை மதங்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் சமூக ஊடக பிரச்சாரங்கள் குரோதத்தை உருவாக்கியுள்ளன என சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன என அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பொதுபல சேனா போன்ற சிங்கள தேசியவாத குழுக்கள் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றன என தெரிவித்துள்ள அமெரிக்கா சிஙகள தேசியவாத குழுக்கள் மத மற்றும் சிறுபான்மையினத்தவர்களை சமூக ஊடகங்களில் இழிவுபடுத்துகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளது.
முஸ்லீம் தமிழ் சமூகத்தினரிற்கு எதிராக குரோதங்களை தூண்டுபவர்களிற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. THINAKKURAL
But the US does mot talk about Zeonist terror in Al-Aqsa masjid and Jerusalem.
ReplyDeleteIn Srilanka they talk like this due their need but not due to the love toward minority....