Header Ads



நீர்கொழும்பில் பெருநாள் தொழுகையும், விஷேட சொற்பொழிவும் பேஸ்புக்கில் ஒளிபரப்பு


- இஸ்மதுல் றஹுமான் -

கோவில் 19 வைரஸின் பயங்கர அச்சுறத்தினால் ஈதுல் பித்திர் பெருநாள் வீடுகளில் முடிக்கப்பட்ட நிலையிலேயே கொண்டாடுகின்றனர்.

நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையும், விஷேட சொற்பொழிவும் ஒலிபெருக்கி மூலமாகவும் பள்ளிவாசல் முக நூல் ஊடாகவும் நேரடியாக ஒலி, ஒளிபரப்பப்பட்டன.

பள்ளிவாசல் இமாம்கள், முகத்தின், ஊழியர் மாத்திரமே கலந்துகொண்டனர். 

தக்பீருடம் ஆரம்பமான இந்த நிகழ்வில் பெருநாள் தொழுகையை பெரிய பள்ளிவாசல் பிரதான பேஷ்இமாம் மெளலவி ஐ.எல். ஹனீபா நடாத்த விஷேட சொற்பொழிவை அஷ் ஷேக் அப்துல்லாஹ் முப்தி நிகழ்த்தினார்கள்.

சொற்பொழிவின் போது தொழுகையை தொடர்ந்தும் கடைபிடிப்பது தொடர்பாகவும்,மன்னிக்கும் மணப்பான்மையையும், ஸதகாக்களை வழங்கி ஏனையவர்களுக்கு உதவி செய்வது தொடர்பாகவும்,கொரோனா அச்சுறுத்தலினால் ஏற்பட்டுள்ள நிலமைகளையும் அதன்மூலம் பாதுகாப்புத்தேடும் முறைகளையும் விளக்கினார்.

துவா பிராத்தனையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.



No comments

Powered by Blogger.