கர்ப்பிணிகள் வேலைக்கு செல்லத் தேவையில்லை -சகல அரச நிறுவனங்களிலும் குறைந்த ஊழியர்களுடன் அத்தியாவசியத் தேவைகள் மாத்திரம் மேற்கொள்ளத் தீர்மானம்
அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கர்ப்பிணித் தாய்மார்கள் சேவைக்கு அழைக்கப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய சுற்றறிக்கை நாளை (10) வௌியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment