தனது மனைவிக்கு மருந்து கொண்டுசெல்வதாகக் கூறி, பிஸ்கட்டை காண்பித்து தப்பமுயன்றவர் ஹெரோயினுடன் கைது
இங்கிரிய, நம்பான, கெடகடஎல்ல பாலத்துக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியில் ஒருதொகை ஹெரோயினுடன் இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நோய்வாய்ப்பட்டுள்ள தனது மனைவிக்கு மருந்துகொண்டுசெல்வதாகக் கூறி, இந்நபர் போதைப்பொருளை கடத்திச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் சமிக்ஞை செய்தபோது, காரிலிருந்த சந்தேகநபர் பிஸ்கட் பைக்கற்று ஒன்றை, குறித்த அதிகாரிகளுக்கு வழங்கி அங்கிருந்து தப்பிச் செல்லமுயன்றுள்ளார்.
இதனையடுத்து, காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு சோதனையிட்டபோதே அந்நபரிடமிருந்து ஹெரோயின் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் ரூபா என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரணை ஏகொடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பறீலங்கன் பிழைப்பான்
ReplyDelete