சரிக்கமுல்லை - திக்கல வீதி, மக்களின் கோரிக்கை - உரிய தரப்பினர் கவனம் செலுத்துவார்களா..?
பாணந்துறை, சரிக்ககமுல்லை - திக்கல வீதியில் Multilac கொம்பனிக்கு அருகாமையில் உள்ள, வடிகால் பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று, மண் நிறைந்து காணப்படுகின்றது.
இதனால் அப்பபகுதியில் உள்ள, பல விடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, உடமைகளுக்கு சேதம் விளைவிப்பதால், மக்கள் இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
உரிய தரப்பினர், இவ்வடிகாலில் உள்ள மண்ணை வெளியேற்றி, வெள்ளம் வழிந்தோடும் ஏற்பாடுகளை செய்து தரும்படி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment