தீ பிடித்த கப்பலின் இரசாயனங்கள் நீர்கொழும்பு களப்பில் சங்கமிப்பதைத் தடுக்க நடவடிக்கை
- Ismathul Rahuman -
கடற்பரப்பில் பற்றி எறிந்த "எக்ஸ்பிரஸ் பேர்ல்" கப்பலிலிருந்த கசிந்துள்ள இரசாயன எரிபொருட்கள் நீர்கொழும்பு களப்பில் சங்கமிப்பதைத் தடுக்க கடலும் களப்பும் ஒன்றினையும் நீர்கொழும்பு கொத்தலாவல, முன்னக்கரை பாலங்களில் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடலோர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை,கடலோர பாதுகாப்பு படையினரை என்பன இணைந்து இந்த தடையை ஏற்படுத்தியுள்ளன. இதற்காக பிலாஸ்டிக்கினாலான நீண்ட "ஒயில் பூம்" இரு பாலத்திற்கருகிலும் போட்டு தடையை ஏற்படுத்தியுள்ளனர்.
கடல் நீருடன் கலந்து வரும் எண்ணெய் இவ்விடத்தில் தேங்கி நிற்கும். பின்னர் அதனை அங்கிருந்து "பம்"பன்னுவதன் மூலம் அகற்றப்படும் என தெரிவிக்கின்றனர்.
Post a Comment