முஸ்லிங்களின் மீது சாணாக்கியன், போலி பாசம் காட்டுகிறாரா..? கிழக்கு இளைஞர் சமாதான பேரவை
அது மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வலயக்கல்வி அலுவலக விடயத்தையும் தொட்டு சென்றார். ஒரு பிரதேசத்தின் நீண்டநாள் வரலாறோ அல்லது ஒரு பிரச்சினையின் அடிவேரோ தெரியாமல் மூக்கை நுழைத்துவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அறியாமையை உயரிய சபையில் தொடர்ந்து வெளிக்காட்டிவருவது உங்களை நம்பி வாக்களித்த மக்களை தலைகுனிய செய்துவிடும். முட்டாள்கள் உளறுவதை போல இன்று பாராளுமன்றத்தில் கல்முனை விடயம், முஸ்லிங்களின் விடயம் தொடர்பில் பேசிய அவர் அந்த பிரச்சினைகளின் அகல, நீளத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். கல்முனை விடயத்தில் மௌனமாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரிடம் இந்த பிரச்சினை பற்றி அவர் அறிந்துகொண்டு நாட்டின் உயரிய சபையில் பேச முன்வர வேண்டும்.
தனது வடகிழக்கு மாகாண முதலமைச்சர் கனவை அடைய கிழக்கு தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் மூட்டிவிட்டு குளிர்காய முன்வருவது கண்டிக்கத்தக்கது. கடந்த காலங்களில் உங்களின் கூடாரம் எங்கிருந்து எப்படி நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக இடம்பிடித்தீர்கள், எப்படி தேர்தலில் வென்றிர்கள் என்பது எல்லா மக்களும் தெரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் யார் என்பதை முஸ்லிம் சமூகம் அறிந்து வைத்துள்ளது. ஆகவே ஆடு நனைகிறது என ஓநாய் அழுதகதையாக முஸ்லிங்களின் மீது போலி பாசம் காட்டுவதை நிறுத்தி உங்கள் பானை அடுப்பில் பல தசாப்தமாக கருகிப்போகியுள்ளது அதை பாருங்கள் என கேட்டுக்கொள்கிறோம்
கிழக்கு இளைஞர் சமாதான பேரவை
கல்முனை
கொஞ்ச நாட்களுக்கு முன்பு இவருக்கு முஸ்லிம்கள் கூஜா தூக்கினீர்களே.இப்ப புரிந்ததா வேஷம்.
ReplyDeleteகிழக்கு சமாதான பேரவைக்கு சாணக்கியன் எம்.பி அவர்கள் என்ன பேசினார் என்பதையே விளங்க முடியாமல் உள்ளது .எனவே இவர்களெல்லாம் எவ்வாறு சமாதானத்தை ஏற்படுத்த முடியும்?
ReplyDelete