Header Ads



அடிப்படைவாத வகுப்புகளை நடத்தியதாக ஒருவர் கைது


ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னதாக சஹ்ரான் ஹாசீம் ஊடாக, ஏற்பாடு செய்யப்பட்ட  அடிப்படைவாத சிந்தனைகளை போதிக்கும்  வகுப்புகளை நடத்திய விவகாரம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மாவனெல்லை, ஹெம்மாத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர், மூதூர் மற்றும ஒலுவில் பகுதிகளில் 2018 ஆம் ஆண்டு குறித்த வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.