Header Ads



அலி சப்ரியும், இஷாக் ரஹ்மானும் நீக்கப்பட்டதாக அறிவிப்பு


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோரே இவ்வாறு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் அவர்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. இவனுகள் மட்டுமல்ல முஸ்லீம்களுக்கு துரோகம் செய்யும் எல்லோரையும் கட்சியில் மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நிறுத்த வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.