கிளைமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருட்களுடன் முன்னாள் புலி உறுப்பினர் கைது
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் கிளைமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருட்களுடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் இராணுவச் சிப்பாய் ஒருவரை தாக்கி தலைமறைவாகி இருந்து பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபரின் மீன்வாடியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து கிளைமோர் வெடிகுண்டு, சார்ஜர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து மேலதிக விசாரணைகளை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
முதலில் உலகறிந்த பயங்கரவாத கொலைகாரன் கருணாவை கைது செய்ய வேண்டும்.
ReplyDelete