அரபுலகம் எங்களுக்காக எதையும் செய்யாது என்று தெரியும்
அரபுலகம் எங்களுக்காக எதையும் செய்யாது என்று தெரியும். ஆனால் நாங்கள் யாரையும் சார்ந்திருக்கவில்லை. ஆக்கிரமிப்பை எங்களின் சொந்தக் கரங்களால் எதிர்ப்போம். அல்லாஹ் நாடினால், எங்களின் இறுதி மூச்சு வரை நாங்கள் எதிர்த்துக் கொண்டே இருப்போம். இந்த நிலங்களை தங்களுடையது என்று கூறும் அவர்களின் கபடத்தனத்தை கேட்டு எனது உள்ளம் கொதிக்கிறது. அவர்கள் சொல்வது பொய் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது சியோனிஸம். இதற்கும் யூத மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உடனான எங்களின் உறவு நன்றாகவே இருக்கிறது. ஆனால் நாங்கள் ஆக்கிரமிப்பை முழுவதுமாக நிராகரிக்கிறோம்.
- ஜெரூஸலத்தின் ஷேக் ஜர்ராஹ் பகுதியின் உம்மு ஸமீர் -
(Riaz Ahamed)
இந்த ஏக்கம் அரபு நாடுகளை சும்மா விடாது இருந்து பாருங்கள்.
ReplyDelete