Header Ads



நீர்கொழும்பிற்கு ஆபத்து - தீ பிடித்த கப்பலில் இருந்து எண்ணெய் கசியலாமென எச்சரிக்கை


கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடிந்து எரிந்துகொண்டிருக்கும் எம்.வி-எக்ஸ் பிரெஸ் பேர்ல் கப்பலில் இருந்து ஏற்படக்கூடிய எண்ணெய் கசிவினை எதிர்கொள்வதற்கு இலங்கை தயாராகிவருகின்றது .

பிரெஸ் பேர்ல் கப்பல் எவ்வேளையிலும் கடலில் மூழ்கலாம் பாரிய எண்ணெய் கசிவு ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் கசிவு காரணமாக நீர்கொழும்பிற்கு பெரும் தாக்கம் ஏற்படலாம் என கடல்சார் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய காலநிலையை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எண்ணெய் நீர்கொழும்பை நோக்கி நகரும் என கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்சனி லகந்தபுர தெரிவித்துள்ளார்.

இதனை எதிர்கொள்வதற்கும் பாதிப்பை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.