மருத்துவ உபகரணங்களிற்கு பெரும் தட்டுப்பாடு - செல்வந்தர்கள் உதவவேண்டும் என வேண்டுகோள்
மருத்துவமனைகளில் மருத்துவஉபகரணங்களிற்கான தேவை அதிகரித்துவருவதால் நாட்டின் செல்வந்தவர்களை மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டுள்ளார்.
மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்களிற்கான தேவை பெருமளவில் அதிகரித்துவருவதாக அவர் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒக்சிசனிற்கான தேவை மருத்துவமனைகளில் அதிகரித்து வருகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் தீவிரகிசிச்சை பிரிவுகள் விஸ்தரிக்கப்படுவதால் செயற்கை சுவாசக்கருவிகளிற்கான தேவை அதிகரிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்கொடையாளர்கள் தங்கள் பகுதியிலுள்ள மருத்துவமனைகளுடன் தொடர்புகொண்டு மருத்துவமனைகளிற்கு உதவமுன்வரலாம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுதர்சினி பெர்ணான்டோபுள்ளேயாக இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment