பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோ, திடீரென தீப்பிடித்து எரிந்தது
- எஸ்.றொசேரியன் லெம்பேட் -
மன்னார் உப்புக்குளம் புதியத் தெரு பகுதியின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று இன்றுக் காலை காலை 7.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர், அதிலிருந்து பாய்ந்து தப்பியுள்ளார்.
எனினும், குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக தீ பிடித்து எரிந்துள்ளது. TM
Post a Comment