Header Ads



அடிப்படைவாத வகுப்புகளை ஏற்பாடு, செய்ததாக ஒருவர் கைது


சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் 2018 ஆம் ஆண்டு அடிப்படைவாதத்தைத் தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு செய்த நபர் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மூதூர் பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

38 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைகளை நிறைவு செய்தவர்களுக்கு இவ்வாறு வகுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.