Header Ads



றிசாத் பதியுதீன் பாராளுமன்ற ஆசனத்தை இழப்பாரா..? பாராளுமன்றத்தில் சுமந்திரன் கூறிய விடயம் (வீடியோ)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுவது தொடர்பில்  அமைச்சர் சரத் வீரசேகரவின் அறிக்கைக்  குறித்து எம். ஏ. சுமந்திரனின் தலையீடு.

"நிர்வாக தடுப்பு உத்தரவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர முடியாது" என்று ஒரு அமைச்சர் இவ் அவையில் முதல் முறையாக கூறியுள்ளார். இந்த சபையின் வரலாற்றில் இது ஒருபோதும் நடந்ததில்லை. இதுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும், குறைந்தபட்சம் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக தீர்ப்பளிக்க முன், அவரது ஆசனத்தை இழந்ததில்லை. அமைச்சர் சொல்வது ஒரு சட்டவிதியாக அமையுமாயின், மூன்று மாதங்களுக்கு யாராவது நிர்வாக ரீதியாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு அவரது நாடாளுமன்ற இடத்தை இழக்க முடியும். இவ்வாறான ஓர் சட்ட விதியை ஏற்றுக்கொள்ள முடியாது!  பிரதமரும், ஜனாதிபதியும், என்னுடன் உடன்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவ்வாறாயின் அவர்கள் இதனை தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், அரசினை எதிர்க்கும் எந்தவொரு அரசியல்வாதியையும் கைதுசெய்து நிர்வாக ரீதியாக தடுத்து வைக்கப்பட்டு, நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பிடாமலேயே, அவரது நாடாளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிடும். ”

No comments

Powered by Blogger.