தடுப்பூசிகளின் பற்றாக்குறையை எண்ணி அஞ்ச வேண்டாம் - இராணுவத் தளபதி
தடுப்பூசிகளின் பற்றாக்குறையை எண்ணி அஞ்சுவதற்கு எந்த அவசியமும் இல்லையென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” தகுதிவாய்ந்த ஒவ்வொருவருக்கும் சரியான நேரத்தில் கொவிட் -19 தடுப்பூசியானது செலுத்தப்படும்.
அத்துடன் வெளிநாடுகளிலிருந்து தேவையான தடுப்பூசிகளை வாங்குவதற்குறிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதோடு ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையிலான குழுவினர் , அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளை வாங்குவதற்காக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
எனவே வெகு விரைவில் அஸ்ட்ராசெனேகாவின் முதலாம் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள முடியும் ”என அவர் தெரிவித்தார்.
Post a Comment