நீர்கொழும்பு நகைக்கடையில், பட்டப்பகளில் கொள்ளை
- Ismathul Rahuman -
நீர்கொழும்பு நகரில் நகைக்கடையில், பட்டப்பகளில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை பகல் 1 மணியளவில் கிறீன்ஸ் வீதியில் அமைந்துள்ள நகைக்கடைக்கு வந்த இருவருக்கு மோதிரம் வாங்குவதற்காக தட்டில் வைத்து நகைகளை காண்பித்துள்ளார் கடை ஊழியர். அதனைப் பார்த்துவிட்டு வாங்காமல் சென்றுவிட்டனர். பின்னர் 3 மணியளவில் முன்புவந்தவரில் ஒருவர் வந்து
மோதிரத்தை வாங்குவதற்காக பார்வையிட்டுள்ளார். அவன் திடீர் என அதிலிருந்து ஐந்து மோதிரங்களை சுறுட்டிக் கொண்டு பாய்ந்து ஓடியுள்ளார். ஊழியர்கள் பின்னால் விரட்டிச் சென்றபோது வீதியில் காத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான நான்கு பவுன் எடையுள்ள 5 மோதிரங்களை கொள்ளையடித்துள்ளதாக கடை உரிமையாளர் கூறினார். நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நகரைப் பாதுகாப்பதற்காக தனியாக "உகுஸ்ஸா" பொலிஸ்பிரிவு இயங்கிவருவதுடன் நகரில் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவது உண்டு. இவ்வாறான நிலமையிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Post a Comment