Header Ads



அவசரமாக இரத்ததானம் வழங்குமாறு கோரிக்கை


நாட்டில் பரவி வரும் கொரோனா ​தொற்றால், புற்றுநோயாளர்களுக்கு தேவையான  இரத்தம் வெகுவாக குறைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதற்கமைய, இரத்ததானம் செய்ய முன்வருபவர்கள், மஹரகம அபெக்ஸா வைத்தியசாலையின் இரத்த வங்கி வளாகத்துக்கு வருகைத் தந்து, இரத்த தானம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உரிய சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடித்து, நாடுபூராகவுமுள்ள இரத்த வங்கிகளுக்கு இரத்த தானம் செய்வதற்காக சுகாதாரப்பிரிவின் http://nbts.health என்ற இணைய முகவரியில் பதிவு செய்த பின்னர் கிடைக்கப் பெறும் குறுஞ்செய்தியைப் பயன்படுத்தி, இரத்த தானம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.அத்துடன், மஹரகம அபெக்ஸா வைத்தியசாலையின் 011 – 2849 525 / 0718 845 700, தேசிய இரத்த வங்கியின் 011- 2369931 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இரத்த தானம் வழங்குவதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.