வரலாற்றில் முதன்முலாக பாராளுமன்றத்தின் சகல யன்னல், கதவுகளும் திறக்கப்பட்டன
கொரோனா தொற்று காரணமாக, பாராளுமன்றத்தின் சகல யன்னல்,கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தின் சகல யன்னல், கதவுகளும் திறக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டங்கள் நடக்கும் மண்டபங்கள், கட்டடங்களின் கதவு, யன்னல்களை திறந்து வைப்பதன் ஊடாக தொற்று பரவுவதை ஓரளவு குறைக்கலாமென சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளதைப் பின்பற்றியே பாராளுமன்றத்திலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment