Header Ads



பெருநாள் தொழுகையை வீட்டிலேயே தொழுங்கள் - பள்­ளி­வா­சல்­க­ளிலோ, பொது இடங்­க­ளிலோ கூட்­டாக நிறை­வேற்ற முடி­யாது - வக்பு சபை


நோன்புப் பெருநாள் தொழு­கையை பள்­ளி­வா­சல்­க­ளிலோ அல்­லது பொது இடங்­க­ளிலோ கூட்­டாக நிறை­வேற்ற முடி­யாது என்றும் வீட்­டி­லேயே தொழு­து­கொள்­ளு­மாறும் வக்பு சபை அறி­வு­றுத்­தி­யுள்­ளது. ஏற்­க­னவே அமு­லி­லுள்ள சுகா­தார வழி­காட்­டல்­க­ளுக்­க­மை­யவே நோன்புப் பெருநாள் தினத்­தன்றும் முஸ்­லிம்கள் நடந்து கொள்ள வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

‘‘பள்­ளி­வா­சல்­களில் தராவிஹ், ஜும்ஆ, பெருநாள் தொழுகை ஆகிய கூட்­டுத்­தொ­ழு­கை­களை தொழ முடி­யாது. பள்­ளி­வா­சல்­களில் தனித்­த­னியே ஒரே தட­வையில் தொழு­வது 25 ஆக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் அசேல குண­வர்­த­னவின் சுற்று நிரு­பத்தில் இது பற்றி தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது’’ என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். – Vidivelli

No comments

Powered by Blogger.