Header Ads



கிண்ணியாவிலும் கொரோனா ஜனாசாக்களை, நல்லடக்கம் செய்யலாம் - அனுமதி கிடைத்தது


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

கொவிட்19 காரணமாக உயிரிழக்கும் ஜனாசாக்களை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்து வந்த நிலையில் தற்போது திருகோணமலை மாவட்டம் கிண்ணியா மஹமாரு பகுதியிலும் நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பில் அண்மையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அரசியல்வாதிகள்,பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கிண்ணியாவிற்கு விஜயம் செய்து மஹமாரு பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கான இடத்தினை பார்வையிட்டுச் சென்றுள்ளனர் இதனை தொடர்ந்து அதற்கான அனுமதி தற்போது இன்று (25)கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார பிரிவுக்கு பொறுப்பானவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நாட்டில் கொரோனா காரணமா உயிரிழக்கும்  ஜனாசாக்களை ஓட்டமாவடியில் மாத்திரமே நல்லடக்கம் செய்யப்பட்டது ஆனால் கிண்ணியாவில் அதற்கான இடம் அடையாளப்படுத்தப்பட்டதை தொடர்ந்து உரிய தரப்புகளுக்கு மக்கள் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றனர். 


No comments

Powered by Blogger.