Header Ads



அடைத்து வைத்து வேலை வாங்கப்பட்ட 8 பெண்கள் மீட்பு. - தம்புளையில் சம்பவம்


- காஞ்சன குமார ஆரியதாச -

தம்புளை பொருளாதார மத்திய நிலையத்துக்குப் பின்புறமாகவுள்ள களஞ்சியசாலையொன்றுக்கு, கிழங்கு, வெங்காயம் துப்புரவு செய்துகொண்டிருந்த 8 பெண்களை, பொதுச் சுகாதார அதிகாரிகள் மீட்ட சம்பவமொன்று, இன்று (06) பதிவானது.

குறித்த களஞ்சியசாலைக்குள் அந்தப் பெண்களை அடைத்து வைத்தே, அவர்களிடமிருந்து வேலை வாங்கியதாக, தம்புளை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, குறித்த நகரம் ‌மூடப்பட்டிருந்த நிலையிலேயே, குறித்த களஞ்சியசாலைக்குள் வேலை நடந்துள்ளதாக, அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.