Header Ads



மீன் பிடிப்பது பாவம் என்று கூறிய, 85 வயது பிக்குவை அடித்துக் கொலைசெய்த இளைஞர்கள்



கால்வாயில் மீன் பிடிப்பது பாவம் என்று அறிவுரை கூறியதை அடுத்து 85 வயது பௌத்த துறவி ஒருவர் தடியால் அடித்து கொலைசெய்யப்பட்டதாக வெலிகம பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் 29 ஆம் திகதி நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட துறவி 16 நாட்களாக மாத்தறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்..

வெலிகம கொவியாபான கபுவத்த ஸ்ரீ விவேகாராம கோயிலின் தலைமை பதவியில் இருந்த தித்தகல்லே தேவானந்த தேரரே இதில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் ஐந்து இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த விகாரைக்குப் பின்னால் உள்ள மீன்களுக்கு அரிசி வீசும் பழக்கம் தேரருக்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. 29 ஆம் திகதி அந்த இடத்தில் தங்கியிருந்த ஒரு இளைஞன் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளார்.

அதை தேரர் தடுக்க முற்பட்ட போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சந்தேக நபர் மேலும் 5 பேருடன் வந்து துறவியைத் தாக்கியதாக பொலிசார் தெரிவித்தனர். IBC

1 comment:

  1. முதலில் மனிதர்களால் மனிதர்கள் கொல்லப்படுவதை தடுக்க முனையுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.