Header Ads



கொழும்பிலிருந்து யாழப்பாணத்திற்கு 'படுக்கை ஆசன புகையிரத சேவை' மே.7 முதல் ஆரம்பம்


- என்.ராஜ் -

யாழ் -கொழும்பு புகையிரத சேவையில் எதிர்வரும் 7ஆம் திகதி முதல்  ‘படுக்கை ஆசன  சேவை’ ஆரம்பமாகுமென  யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத  அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

இரவுநேர தபால்  புகையிர சேவையில் குறித்த படுக்கை ஆசன வசதி கொண்ட மேலதிக  பெட்டி இணைக்கப்பட்டு  சேவை இடம்பெறவுள்ளதாகவும்  சேவையினை பெற விரும்புவோர் ஆசன முற்பதிவுகளை யாழ்ப்பாண புகையிரதத்தில் மேற்கொள்ள முடியும் என தெரிவித்ததோடு 

தற்போது புகையிரத   சேவை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை  தொடர்பில் வினவிய போது அதில் எவ்வித உண்மையும் இல்லை  கொழும்பிலிருந்து  காலை 5.45  மணிக்கு   புறப்பட்டு மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறப்படும் நகர் சேர் கடுகதி புகையிரத சேவை மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், அந்த சேவையைத் தவிர்ந்த ஏனைய சேவைகள் வழமைபோல் தற்போதுள்ள கொரோனா  நிலைமைக்கு ஏற்றவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறுகின்றன என்றார்.

No comments

Powered by Blogger.