கிழக்கில் 6 மணியுடன் கடைகளை மூடவும், மக்கள் நகருக்கு வருவதை தடுத்து, பயணக் கட்டுப்பாடு விதிக்கவும் முன்மொழிவு
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் பிரிவிடம் அம்மாகாண அளுநர் அநுராதா யஹம்பத் கோரியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மாலை 6 மணிக்குப் பின்னர் மூடுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், மாலை 6 மணிக்குப் பின்னர் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்ந்த ஏனையக் காரணங்களுக்காக மக்கள் நகருக்குள் வருவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பாதுகாப்புப் பிரிவிடம் கோரியுள்ளார்.
Post a Comment