Header Ads



நீர் நிரம்பிய குழியில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு


- இஸ்மதுல் றஹுமான் -

நீர் நிரம்பிய குழியில் வழிக்கி விழுந்து தாயும் மகனும் உற்பட மூவர் பறிதாபகரமாக மரணமடைந்த சோக சம்பவம் கொச்சிகடை, மடம்பெல்ல, ஹல்பே கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் வலமையாக கீரை வகைகளை பறிப்பதற்காக அம்பலயாய பிரதேசத்திற்குச் செல்வதுண்டு

கீரைகளை பறித்து கட்டுகளாக கட்டி விற்பனை செய்து தமது வாழ்க்கையை நடத்துகின்றனர். 3ம் திகதி மாலையில் வலமைபோல் இம்மூவரும் கீரைபறிக்க சென்றுள்ளனர். இரவு 7 மணியாகியும் வீடு திறம்பாததனால் வீட்டாரும் அயலவர்களும் தேடிச் சென்றுள்ளனர்.நீர்நிரம்பிய குழியில் மூவரும் விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். உடணடியாக மூவரையும் அக்கரகம வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அவர்களை பரிசோதித்த வைத்தியர் மூவரும் இறந்துவிட்டனர் எனக் கூறினார். அப்பிரதேசத்தில் களிமண் அகழ்ந்து விடப்பட்ட பழைய குழிகள் உள்ளன். குழியில் மழைக்கு நீர் நிரம்பியுள்ளது. இதையறியாத இவர்கள் அதனை கடந்துசெல்லும் போது வலிக்கி குழியில் மூவரும் விழுந்துள்ளதாக தெரிகிறது.

கட்டான, அம்பலயாய,கோபிவத்த ஜனபதயைச் சேர்ந்த ஒபிட்டிகலகே சுஜீவ 42 வயது தாய், சனிதுஅனுஹஸ் 10 வயது மகன், ஹங்கி இஷார 9 வயது உறவு மகன் ஆகிய மூவருமே பறிதாபகரமாக மரணமடைந்துள்ளன.

மூவரினதும் சடலங்கள் அக்கரகம வைத்தியசாலையிலிருந்து நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரண விசாரணை நடாத்தி உறவினர்களிடம் பூதவுடல்கள் கையளிக்கப்பட்டதாக விசாரணை நடாத்திய கொச்சிகடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரீனிக்க ஜயகொடி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.