Header Ads



நாட்டை 2 வாரங்களிற்கு முடக்குமாறு, ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன் - சுதர்சினி


நாட்டை  இரண்டுவாரங்களிற்கு முடக்குமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே  தெரிவித்துள்ளார்.

நானும், மருத்துவநிபுணர்களும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுசுகாதார நிபுணர் என்ற அடிப்படையில் நான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளேன், மருத்துவர்களின் அமைப்புகளும் இதேவேண்டுகோளை விடுத்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.