Header Ads



ஒரேநாளில் 2,659 பேருக்கு தொற்று - இலங்கையில் மோசமான சாதனையை செய்த கொரோனா


இலங்கையில் மேலும் 927 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். 

இதற்கமைய இன்று இதுவரையில் 2,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 125,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. 

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,365 பேர் இன்று (09) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 104,463 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 786 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.