நாட்டில் 20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த தீர்மானம் - பயங்கரவாதம், அடிப்படைவாதம், இனவாதத்தை தூண்டுகின்றதாம்
இவ்வாறான கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கு, அரச கட்டமைப்பிலுள்ள நிறுவனங்களின் ஊடாக – தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழக்கத்திலுள்ள சட்டத்துக்கு அமைய வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதற்கு அமைச்சர் அலி சப்ரியும் தானும் இணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றதும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உரிமையாளர்கள் இல்லாத பேஸ்புக் கணக்குகளின் மூலம் பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இளம் சந்ததியினரை வழிகெடுக்கும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை தூண்டுவதற்கும் இது வழி வகுப்பதாக கண்காணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேசிய பாதுகாப்பையும் சிறந்த சமூக கட்டமைப்பையும் வழிநடத்தி செல்லும் பொருட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றும் ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டை சிறந்த கட்டமைப்பில் செலுத்துவதற்காக இந்த மந்தி(ரி)யின் முடிவு சிறந்ததா என்பதைத் தீர்மானி்பபது பொது மக்கள். நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதற்குத்தான் மக்கள் இந்த மந்தி(ரி)களுக்கு வாக்களித்தார்கள். பொதுமக்களின் தனிப்பட்ட உரிமையில் கைவைத்து அவற்றை இல்லாமல் செய்வதற்கல்ல என்பதை அவர்கள் சரியாக உணர்ந்து செயலாற்ற வேண்டும்.அல்லாவிட்டால் கேரளாவில் பிஜேபிக்கு கிடைத்த வாக்குகள் தான் அவர்களுக்கும் கிடைக்கும்.
ReplyDeleteDo it first, appreciated
ReplyDeleteநல்லதுதான்
ReplyDelete