Header Ads



சீனாவிடமிருந்து 14 மில்லியன் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை


சீனாவிடமிருந்து 14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய,  அதில் ஒரு தொகுதியான 3 இலட்சம் தடுப்பூசிகளை ஒரு மாதத்துக்குள் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என,கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.

அத்துடன் சீனாவால் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ள 5 மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதெனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  மேலதிக தடுப்பூசிகளை சீனாவிலிருந்து கொள்வனவு செய்வது குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் சீனத்தூதுவருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (19) இடம்பெற்றதாகவும் கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.