Header Ads



இன்று 12 கொரோனா ஜனாஸாக்கள் மஜ்மா நகரில் அடக்கம்


-நஜிமிலாஹி- 

இன்று 12 ஜனாஸாக்கள் மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டது. இதன்படி கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் திகதி முதல் இன்று வரையும் (25.05.2021) சுமார் 263 கொரோனா மரணங்கள் 'கொரோனா மரணங்களை அடக்கம் செய்வதற்காக அனுமதியளிக்கப்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள மஜ்மா கிராமத்தில்' அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் சிரேஸ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் ஜப்னா முஸ்லிமுக்குத் தெரிவித்தார். 

இதில் கிறிஸ்தவ (கத்தோலிக்கம்) மதத்தைச் சேர்ந்த 08 பேரும் இந்து மதத்தைச் சேர்ந்த 09 பேரும் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவரும் உட்பட சுமார் 245 முஸ்லிம்களும் இன்று வரைக்கும் (25.05.2021)  மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் சிரேஸ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மேலும் குறிப்பிட்டார். 

மார்ச் ஐந்தாம் திகதிக்கு பிறகு கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்தவற்கான இரண்டாவது இடத்துக்கான அனுமதியை சுகாதார அமைச்சு இன்று (25) வழங்கியுள்ளது. இதன்படி கிண்ணியா மஹமாறு பிரதேசம் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இரண்டாவது பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.