Header Ads



விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு, PCR சோதனையில் கொரோனா - மொரட்டுவயில் சம்பவம்


பாதசாரிக் கடவையில் லொறியால் மோதுண்டபெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்றிருப்பது தெரியவந்துள்ளது. 

35 வயதுள்ள குறித்த பெண் நேற்றிரவு மொரட்டுவ கட்டுக்குருந்த பகுதியிலுள்ள பாதசாரிக் கடவை ஒன்றில் வீதியைக் கடக்க முயற்சிக்கையில் லொறி ஒன்று மோதியதில் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த பெண் ஆரம்பத்தில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர். 

தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற முன்னதாக சுகாதார அதிகாரிகள்அவருக்கு பிசிஆர் சோதனை மேற்கொண்டனர். அதன்போதே தொற்றிருப்பது தெரியவந்தது. 

எனினும் காயங்கள் காரணமாக குறித்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ளார். 

இதேவேளை அபாயகரமான விபத்தை ஏற்படுத்திய லொறிச் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். TL

No comments

Powered by Blogger.