Header Ads



புதிய Mp யை நியமிக்க, சில மணி நேரமே சென்றது - ரஞ்சனின் பேஸ்புக் பதிவு பின்னர் நீக்கப்பட்டது


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுப்படியாகுமா இல்லையா என்பதை தீர்மானிக்க மூன்று மாதங்கள் சென்ற போதிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினரை நியமிக்க சில மணி நேரம் மாத்திரமே சென்றது எனவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி நேரத்தில் வலிமிகுந்த கர்மாவை அனுபவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் இட்டிருந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் ரஞ்சன் ராமநாயக்க தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இருந்த குறித்த பதிவு பின்னர் நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.