Header Ads



உண்மையான தேசப்பற்றாளர்களையும், தேசத்துரோகிகளையும் விரைவில் அடையாளம் காணமுடியும் - எல்லே குணவங்ச


துறைமுக நகரைச் சீனாவுக்கு வழங்குவது சம்பந்தமான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்த பின்னர் தேசப்பற்றாளர்களையும், தேசத்துரோகிகளை அடையாளம் காண முடியும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

துறைமுக நகரகத்தின் எதிர்கால நடவடிக்கைகள் இலங்கையின் மாகாணசபைகள், நகரசபை முறை உட்பட இலங்கை அரசின் நிர்வாக முறைக்கு அப்பால் சென்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை துறைமுக நகரின் கணக்காய்வுகளில் தலையிட முடியாது என்ற நிலைமை உருவாகும் என்பதால், குறித்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் அனைவரும் எதிர்க்க வேண்டும்.

எமது நாட்டை கடல் பரப்பு உலகில் பிரிக்கின்றது. கடலை நிரப்பியே துறைமுக நகரம் உருவாக்கப்பட்டது. எமது நாட்டின் வரைப்படமும் தற்போது மாறியுள்ளது. உருவாக்கப்பட உள்ள துறைமுக நகருக்குள் நாம் செல்ல முடியாது.

அதற்கு வெளிநாட்டு நாணயங்கள் மூலமே கொடுக்கல் வாங்கல் நடைபெறும். இது தனியான நாடு. நாட்டை பிரிக்க நாடாளுமன்றத்தில் சட்ட மூலத்தைக் கொண்டு வருகின்றனர்.

நாட்டை நேசிக்கும் அறிவுஜீவிகள் இது குறித்து அமைதியாக இருப்பார்கள் எனில், எமக்கு உண்மையான தேசப்பற்றாளர்களையும் தேசத்துரோகிகளையும் இலகுவாக அடையாளம் காணமுடியும். அரசத் துரோகியாக கூட இருக்கலாம், ஆனால் தேசத்துரோகியாக மாறுவது நல்லதல்ல. சீனா எமக்குக் கடனை அள்ளி கொடுக்கின்றது.

அவை டொலர்கள் அல்ல, சீனாவின் யுவான். எமக்கு இதுபற்றி சரியாகத் தெரியாது. எனினும் சீனா தனது கொடுக்கல், வாங்கலைச் சரியான முறையில் தீர்த்துக் கொள்கிறது.

கடல் என்பது எமது வளம். கடலுக்குள் இருக்கும் கனிய வளம் பற்றி தற்போது யாரும் பேசுவதில்லை. அதுவும் சீனாவுக்கா என்பது எமக்குத் தெரியாது. இவற்றுக்கு இடையில், எமது மீன் வளத்தை கொள்ளையிட இந்தியாவுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சித்து வருகிறார்.

இதற்கு இடமளிக்க முடியாது. இந்த வளங்கள் மூலம் எமது நாட்டு மக்களே பாதுகாக்கப்படுவார்கள் எனவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. நக்குண்ணும் மட்டும் நா மூடியிருந்து இப்ப மட்டும் தேசப்பற்று வந்து என்ன இலாபம். யுத்த நேரத்திலும் நக்குண்டதால் தால் இன்னும் இம்சைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  2. Neenga uruvaakkiya desa pattaaalargal allavo avargal!!!!

    ReplyDelete

Powered by Blogger.