Header Ads



முஸ்லிம் பிரதேசங்கள் முடக்கப்படுமாயின் நாம், முன்னர் அனுபவித்த இன்னல்களை மீண்டும் அனுபவிக்க தேரிடும் - ஹலீம்


நோன்புப் பெருநாளுக்கான ஆடைகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்வதில் முஸ்லிம் மக்கள் ஆர்வம் செலுத்திவரும் நிலையில் முழுமையாக சுகாதார வழி காட்டல்களை பின்பற்றவேண்டும் என முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஏ. ஹலீம் வலியுறுத்தியுள்ளார்.

வீரியமிக்க கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சுகாதார வழிகாட்டல்களை புறந்தள்ளி நடந்தால் முஸ்லிம் பிரதேசங்கள் முடக்கப்படுமாயின் நாம் முன்னர் அனுபவித்த இன்னல்களை மீண்டும் அனுபவிக்க தேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

No comments

Powered by Blogger.