Header Ads



கொழும்பு துறைமுக நகரம், தனிநாடாக மாறும் ஆபத்து – விஜயதாச ராஜபக்ச


கொழும்பு துறைமுக நகரம் தனிநாடாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுஜனபெரனமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்புதுறைமுகநகர் ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு துறைமுகநகரம் நாட்டின் நிர்வாகவிதிமுறைகளில் இருந்து விடுபடும் என அவர் தெரிவித்துள்ளார்.

உத்தேச சட்ட மூலத்தின் அடிப்படையில் கொழும்புதுறைமுகநகர சட்டமூலம் கொழும்பு போர்ட்சிட்டி கொழும்புமாநகரசபையின் கீழ் வராது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட 1100 ஏக்கரையும்,சீன முதலீட்டாளரின் விருப்பத்தின்படி உத்தேச ஆணைக்குழு கட்டுப்படுத்துவதை உத்தேச சட்டமூலம் உறுதி செய்கின்றது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். Thinakkural

No comments

Powered by Blogger.