Header Ads



ஓமானிலிருந்து வந்த பாணந்துறை, பெண் கிளிநொச்சியில் வபாத்


- மு.தமிழ்ச்செல்வன் -

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த, பாணந்துறையைச் சேர்ந்த 47 வயத பெண் மரணமடைந்துள்ளார். அவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டத்தில் அவருக்கு கொவிட் -19 தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறிதத் பெண் இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணிற்கு ஏற்பட்ட திடீர் நோய் காரணமாக,  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (25)  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் பாணந்துறை பகுதியைச்சேர்ந்த எம் இசற் எம் எச் பாத்திமா சியானா  (வயது 47) என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வை்ததியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.