Header Ads



ஜமைக்காவில் இருந்து பரிசுப் பொதியாக, இலங்கைக்கு வந்த கொக்கைன்


ஜமைக்காவில் இருந்து பரிசுப் பொதியாக தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த கொக்கைன் போதைப்பொருள் பொதியொன்றை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இன்று (27) கைப்பற்றியுள்ளனர். 

சீதுவ பகுதியில் உள்ள பொதிகள் விநியோகிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு குறித்த பொதி அனுப்பப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பொதி சில வாரங்களுக்கு முன்னர் கிடைக்கப் பெற்றிருந்த போதிலும் இது தொடர்பில் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், குறித்த பொதியின் உரிமையாளராக பெயர் குறிக்கப்பட்டிருந்த கொழும்பு, நாரஹேன்பிட்ட பகுதியை சேர்ந்த 44 வயதுடைய நபர் முன்னிலையில் வைத்து குறித்த பொதியை திறந்திருந்தனர். 

இதன்போது குறித்த பொதியில் இருந்து 25 இலட்சம் ரூபா பெறுமதியான 95 கிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் உரிமையாளராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.