Header Ads



'இந்திய மீனவர்களுடன் தொடர்பை பேண வேண்டாம்' சட்டவிரோத பொருட்களையும் கொண்டும் வராதீர்கள்


கொரோனா தொற்றின் ​வேகம்    அதிகரித்து வருவதால், சர்வதேச கடல்பரப்பில் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதைத்  தவிர்த்துகொள்ளுமாறு மீன்பிடி திணைக்களமானது, வடக்கு மீனவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய இந்திய மீனவர்களுடன்  கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பொருள்கள் பரிமாறுதல் போன்ற எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டாமென்றும்  மீன்பிடி​ திணைக்களத்தின் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவிலிருந்து மஞ்சள் மற்றும் சட்டவிரோத பொருள்களைக் கொண்டு வருவதையும் தவிர்க்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.