Header Ads



ஹம்பாந்தோட்டைக்குள் அனுமதியின்றி புகுந்த, கப்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை


அனுமதியின்றி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்த கதிரியக்க பொருட்களுடனான எண்டிகுவா - பார்படோஸ் நாட்டின் கொடியுடன் கூடிய என்.வீ.பீ.பீ.சீ. நேபள்ஸ் கப்பலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் இருந்து சீனா நோக்கி பயணித்துள்ள குறித்த கப்பல், தகவல்களை மறைத்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நேற்றைய தினம் பிரவேசித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் தற்போது துறைமுகத்திற்கு வெளியே சென்றுள்ள போதும், அதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நங்கூரமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.