Header Ads



மத்ரசாக்கள் - முஸ்லீம் நீதிமன்றங்கள் குறித்து அரசாங்கம், அடுத்த சில வாரங்களிற்குள் முக்கிய தீர்மானங்களை எடுக்கவேண்டும்


அரசாங்கம் மத்ரசாக்கள் மற்றும் முஸ்லீம் நீதிமன்றங்கள் குறித்து அடுத்த சிலவாரங்களிற்குள் முக்கிய தீர்மானங்களை எடுக்கவேண்டும்என அத்துரலிய ரத்னதேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வருடங்களாகின்ற நிலையில் அரசாங்கமும் எதிர்கட்சியும் எடுத்த நடவடிக்கைகள் என்னவென அவர்கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்ரசாக்களில் என்ன விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன என்பது குறித்து கல்வியமைச்சிற்கு எதுவும் தெரியாது என அத்துரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.

மத்ரசாக்களை அரசாங்கத்தின்கீழ் கொண்டுவரவேண்டும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து தேசிய கருத்தொருமைப்பாட்டை உருவாக்கவேண்டியது ஜனாதிபதியின் கடமை என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முக்கியமானவை நாங்கள் அதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல மூளைச்சலவை செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன அவற்றால் ஆயிரக்கணக்கான ஜஹ்ரானை உற்பத்தி செய்யமுடியும் என அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவற்றை பல்கலைகழகங்கள் என அழைக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். Thinakkural

3 comments:

  1. You take care your Bhudistm and we take care our religeon ok!

    ReplyDelete
  2. பாராளுமன்றத்தில் இருக்கவே கூடாத சக்கிலின்களில் ஒன்று பைத்தியம் பிடித்துக் கத்துகின்றது. அதனை அப்படியே ஊத்தை வாளியில் அள்ளி வீசுமாறு முஸ்லிம் சகோதரர்களே, இந்த பரக்கத்தான மாதத்தில் தஹஜ்ஜத் நேரத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அல்லாஹ் நிச்சியம் உங்கள் பிரார்ததனைகளை அங்கீகரிப்பான்.

    ReplyDelete
  3. இவனுடைய பைத்தியம் எப்ப முடியுமோ ?

    ReplyDelete

Powered by Blogger.