Header Ads



முன்னறிவித்தல் இன்றியும் பிரதேசங்களை முடக்குவோம், மக்கள் தயாராக இருக்க வேண்டும் - தளபதி


கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும்  பொலிஸ் பிரிவுகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் , எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்கப்படுமென, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவி்த்துள்ளார்.

எனவே இந்த நிலைக்கு முகம் ​கொடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

இதற்கு முன்னர் முன்னறிவித்தல்  வழங்கப்பட்டு பிரதேசங்கள் முடக்கப்பட்டதென்றும் ஆனால் தற்போதைய ​தொற்று அதிகரிப்பின் காரணமாக எவ்வித அறிவிப்பும் இன்றி முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டை முழுமையாக முடக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.