யாழ்ப்பாணத்தின் அனைத்து கல்வி, நடவடிக்கைகளும் திங்கட்கிழமை ஆரம்பம்
"யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனாத் தொற்று பரவல் சற்றுக் குறைந்துவரும் நிலையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், யாழ். மாவட்டத்தை இயல்பான நிலையில் வைத்திருக்கு மக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Post a Comment